Saturday 31 December 2011

MADURAI/TAMILAGAM-#1

ஐம்பதாண்டுகளுக்கு முன் மதுரை/தமிழகம்


தமிழகத்தில் - குறிப்பாக மதுரையில் நான் கண்டவை பல விஷயங்கள். அவை கவனத்தைப் பெரிதும் ஈர்த்தவை.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழர்களில் பலர் இப்போது விதவிதமான பாக்குத்தூள்களையும் ரெடிமேய்ட் வெற்றிலை-பாக்கு  மிக்ஸையும் பயன்படுத்துகிறார்கள்.
அந்தக் காலத்தில் வாசனைப் பாக்குத்தூள் என்றால் 'அசோகா' பாக்குத் தூள்தான் பிரபலமாகயிருந்தது. அடுத்தபடியாக மதுரையிலிருந்து தயாராகும் சாமுண்டி பாக்குத்தூள்.
புகையிலையில் 'நிஜாம்லேடி' பன்னீர்ப்புகையிலை என்ற பிராண்ட் புகழ் வாய்ந்தது. திருவிழாக்களின்போது நிஜாம்லேடி வேன் ஒன்றில் ஒலி பெருக்கியை வைத்து பாட்டுக்களைப் போட்டு மக்களை அழைத்து, இலவசமாக நிஜாம்லேடிப் புகையிலைப் பொட்டலங்களை வாரி வீசி வழங்குவார்கள்.
வைதவிர பீடாக்கடைகளில் விதவிதமான பீடா கிடைத்தது. மதுரை மேலக்கோபுரத்தெருவில் செண்ட்ரல் சினிமாவுக்கு எதிரில் வெள்ளி, தங்க ரேக்கு வைத்து சுருட்டிய பீடா கிடைக்கும். வெள்ளி ரேக்கு 2-50; தங்க ரேக்கு 25 ரூபாய். 'பான் சுப்பாரி' என்னும் வெற்றிலை பாக்குக் கலவையையும்
தயார்செய்து கொடுப்பார்கள்.
ப்போது அந்த பீடாவெல்லாம் கிடைக்கிறதா என்பது தெரியவில்லை.
ஓர் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் ஒரே கடையில் இருபதுக்கும் மேற்பட்ட பாக்குத்தூள் கலவை வகையறா சமாசாரங்களைக் கண்டதுதான். ஜிகினாத்தாள் பைகளில் அழகழகாகத் தோரணங்களைப் போன்று தொங்கிக்கொண்டிருந்தன. வ்வளவையும் போடுகிறார்களா, என்ன?
அவற்றில் மிக டிமாண்டோடு விற்பனையாகிக்கொண்டிருந்தது 'பான் பராக்' என்னும் ஒரு வகைப் பாக்குத்தூள்தான். வருகிறவர்கள் போகிறவர்களெல்லாம் வெடுக் வெடுக்கென்றும், பச்சக் பச்சக் என்றும் அந்தப் பைகளைப் பிய்த்து எடுத்துக்கொண்டு, காசைக்கொடுத்துவிட்டு, அப்படியே அங்கேயே நின்றவாறு ஆசைதீர பையைக் கிழித்து, உள்ளங்கையில் பான் பராக்கைக் கொட்டி, அண்ணாந்து பார்த்து வாயைத் திறந்து, அதனை வாயில் போட்டு......
அடாடாடாடா! அந்தக் காலத்தில் சீஸர்ஸ் சிகரெட்டுக்குத்தான் விளம்பரப் பலகையில் 'இழுக்க இழுக்க இன்பமடா!' என்று போட்டிருப்பார்கள். அந்த ன்பமெல்லாம் பான் பராக் தரும் இன்பத்திற்கு முன்னால் நிற்காதுபோல.
அதில் ஏதோ போதை தரும் பொருள் கலக்கப்படுவதாகச் சொன்னார்கள்.
ப்படியானால் ஏன் அதனைத் தடை செய்யவில்லை?
ல்·பி என்றொரு ஐஸ்கிரீமிலும் போதைப்பொருள் சேர்க்கப்பட்டதாக முன்பு சொன்னார்கள்.
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், மதுரையில் ஒரு பெரிய ஓட்டல் இருந்தது. அது அப்போதே பிரபலமானது. காப்பிக்குப் பேர் போனது. பஸ் ஸ்டாண்டுக்கும் ரயில்வே நிலையத்துக்கும் அருகில் இருந்ததால் ஏதோ ஒரு கேந்திர முக்கியத்துவம் அதற்கு ருந்தது.
காப்பி சாப்பிட நுற்றுக்கணக்கில் கியூ வரிசையில் நிற்பார்கள். முதலில் டோக்கன் வாங்க வேண்டும். அதன் பின்னர் இடம் கிடைத்து அமர்ந்தபின்னர் காப்பியைக் கொண்டுவந்து வைப்பார்கள். மீண்டும் மீண்டும் அந்தக் காப்பியைச் சாப்பிடவேண்டும் என்று தோன்றும். ந்தக் காப்பியில் மிகச் சிறிதளவு அபின் கலந்ததாக அந்தக் காலத்தில் சொல்வார்கள்.
பான் பராக்கில் புகையிலையும் வேறு ஏதோ போதைப் பொருளும் சேர்க்கப்படுவதாகச் சொன்னார்கள். வேறு சில வாசனைப்பொருள்களும் சாயமும் சேர்கின்றனவாம்.
தெல்லாம் உண்மையானால் பான் பராக் மிகவும் ஆபத்தான பொருள் அல்லவா?
ஏன், எப்படி இவ்வளவு எளிதாகக் கிடைக்கிறது? மருத்துவக்கழகம் இதைப்பற்றி ஏதும் கருத்துத் தெரிவிப்பதில்லையா? முதலில் மருத்துவக்கழகம் என்று ஒன்று இருக்கவாவது செய்கிறதா, என்ன?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment