Friday 20 May 2011

துன்பம் நேர்கையில்

மோட்டிவேஷனல் புத்தகங்கள் ஏராளமாக வந்துவிட்டன. புதிய புதிய பெயர்கள் இப்போதெல்லாம் நிறைய அடிபடுகின்றன. 

Chicken Soup for the Soul  என்னும் தலைப்பில் இதுவரைக்கும் 108 புத்தகங்கள் வந்துவிட்டன. அந்த நூல்களின் ஆசிரியர்கள் இருவரில் Jack Canfield என்பவர் ஒருவர். அவரும் இப்போது மோட்டிவேஷனல் புத்தகங்கள் எழுதுவதோடு பல செமினார்களையும் நடத்துகிறார்.  இருபதாம் நூற்றாண்டில் பேர் போட்டவர்கள் என்றால் அந்த லிஸ்ட் மிகவும் நீளமாக இருக்கும். இருந்தாலும் அந்த லிஸ்ட்டை ஷார்ட்-லிஸ்ட் செய்தால் இருக்கும் பெயர்கள் குறிப்பிட்ட சிலவாக இருக்கும். 
Napoleon Hill, Dale Carnegie, Norman Vincent Peale, Maxwell Maltz, Wayne Dyer, Denis Waitley, Anthony Robbin, Steven Covey, Edward de Bono, Zig Zigler, Og Mandino என்று விளங்கும். 

இந்த லிஸ்ட்டில் ஷ¤ல்லர் என்ற பெயரும் நிச்சயம் ஏறியிருக்கும். Robert Shuller என்ற பெயரில் அப்பா-மகன் ஆகிய இருவரின் பெயர்கள்.  அவர்கள் எழுதிய புத்தகங்கள் அளவில் சற்றுச் சிறியவையாக இருக்கும்.  ஆனால் விஷயத்தில் பெரியவை.  மூத்த ஷ¤ல்லரால் எழுதப்பட்ட நூல்:

'Tough Times Never Last;
But Tough People Do'

அதில் காணப்பட்ட மிக முக்கியமான வாசகம் இதுதான்.

'When the Going Gets Tough,
The Tough People Get Going'

இல்லையா பின்னே? 

ஒரு Tough Situation இருந்தால் ஏன் அந்த சூழ்நிலையில் சும்மா இருக்கவேண்டும்? 

அதிலிருந்து மீளவேண்டும்; வெல்லவேண்டும்.

அதற்கு நம்மிடமே உறுதியும் நம்பிக்கையும் வலுவும் இருக்கவேண்டும். செயல்பாடு வேண்டும். 

அப்படிப்பட்ட Tough People தான் கஷ்டங்களைக் கடந்து வெற்றியையும் மகிழ்ச்சியையும் சாதனைகளையும் நோக்கி முன்னேறிச் செல்லமுடியும்.

சரஸ்வதியின் பன்னிரு நாம துதி



ரொம்பநாளைக்கு முன்னர் ஸ்ரீசரஸ்வதி தேவியின் பன்னிரு திருப்பெயர் மந்திரங்கள் அடங்கிய துதியை அகத்தியர் குழுவில் எழுதியிருந்தேன்.  சிலருக்கு அது தேவைப்படுகிறது.

ஸ்ரீசரஸ்வதிக்கு ஒரு த்வாதச நாம ஸ்தோத்திரம் இருக்கிறது. பன்னிரு நாமங்கள் கொண்டது.

ஸரஸ்வதி திவ்யம் த்ருஷ்டா
வீணாபுஸ்தக தாரிணீ
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா
வித்யா தாநகரீ மம

ப்ரதமம் பாரதீ நாம 
த்விதீயம் ச சரஸ்வதி
த்ருதீயம் சாரதா தேவீ
சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ

பஞ்சமம் ஜகதீக்யாதம்
ஷஷ்டம் வாகீஸ்வரீ தத
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா 
அஷ்டமம் ப்ரஹ்மசாரிணீ

நவமம் புத்திதாத்ரீ ச
தசமம் வரதாயினீ
ஏகாசதசம் க்ஷ¥த்ரகண்டா ச
த்வாதசம் புவனேச்வரீ

ஸர்வஸித்திகரீ தஸ்ய
ப்ரஸன்னா பரமேச்வரீ
ஸா மே வஸது ஜிஹ்வாக்ரே
ப்ரஹ்மரூபா ஸரஸ்வதீ:

"வித்யா தானத்தைச்செய்யும் சரஸ்வதி தேவி திவ்யமான பார்வையால் என்னைப் பார்க்க வேண்டும். அவள் வீணை, புஸ்தகம் ஆகியவற்றைத் தாங்கியவள்; அன்னப்பட்சியை வாகனமாகக் கொண்டிருப்பவள்" என்று சங்கல்பித்து அவளைக் கேட்டுக்கொண்டு,

பாரதி, 
ஸரஸ்வதி, 
ஸாரதாதேவி, 
ஹம்ஸவாஹினி,  
ஜகதி, 
வாகீஸ்வரி, 
கௌமாரி, 
ப்ரஹ்மாசாரிணி, 
புத்திதாத்ரி, 
வரதாயினி, 
க்ஷ¤த்ரகண்டா, 
புவனேஸ்வரி 

ஆகிய பன்னிரு நாமங்களால் துதிக்கிறோம்.

"அவள் எல்லாவகையான சித்திகளையும் செய்பவள். மலர்ச்சியுடன் எழுந்தருளியிருப்பவள். அவள் என்னுடைய நாவில் வசிக்கவேண்டும். அவள் பிரம்மரூபியாகிய சரஸ்வதி" என்றும் பிரார்த்திக்கிறோம்.

'க்ஷ¤த்ரகண்டா' என்பது ஒரு விசேஷமான நாம மந்திரம். 'க்ஷ¤த்ர' என்பது துர்தேவதைகள், துர்மந்திரங்கள், தீயசொற்கள், சாபங்கள் முதலியவற்றைக் குறிக்கும். அவற்றை வெட்டி அழிப்பவள். நமக்கு நன்மையைச் செய்பவள்.