Wednesday 28 December 2011

LAAVANI, AMMAANAI, DONDANG SAYANG

லாவணி, அம்மானை, டோண்டாங் ஸாயாங்


பழந்தமிழர்களிடையே பாட்டெடுத்து, பாட்டுக்குப் பாட்டெடுத்து, எதிர்ப்பாட்டு பாடி தொடர்ந்து செல்வார்கள். யாராவது தோற்கும்வரையில் அது தொடரும்.
இதை 'லாவணி' என்று சொல்வார்கள்.
இவையெல்லாமே தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகை இலக்கிய வகைகளைச் சேர்ந்தவை. 
மலேசியாவில் இவற்றில் ஆற்றல் படைத்த வித்தகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது சிறுகதை, பு%#திய கவிதை முதலியவை மட்டுமே இலக்கியம் என்ற நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். 
ஆகவே மற்றவை அழிந்துவிட்டன. அவற்றைப் பாடிய புலவர்களும் அட்ரஸ் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டனர். அந்த மாதிரி ஆக்கிய தமிழ்த் துரோகிகளை அமேரிக்கத் தமிழர்கள், கனேடியத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் சில MISFITT தமிழர்கள் சிலர் ஆதரித்து கை கொடுக்கின்றனர். இவர்களும் தமிழ்த்துரோகிகள்தாம். 
விஷயத்துக்கு வருகிறேன்.
அம்மானை என்னும் இலக்கியவகை இவ்வகையினதுதான்.
கிராமிய இசையில் பல ஒயிலாட்டப்பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள் இப்படி போட்டி அடிப்படையில் செல்லும்.
மலாய்க்காரர்களிடம் இதேபோல பாட்டிலேயும் கவிதையிலும் போட்டி நடத்தும் வழக்கம் உண்டு. 
கெலாந்தான் மாநிலத்தில் டிக்கிர் பாராட் என்றொரு மரபு இருக்கிறது. 
மலாக்காவில் டோண்டாங்க் ஸாயாங்க் என்ற மரபில் ஓர் ஆண் ஒரு பெண் ஆகிய இருவர்மட்டுமே பங்கு பெறுவர். 
"எதிர்ப்பாட்டு பாடு..இல்லாவிட்டால் நீ ஓடு!" என்ற முறையில்தான் அது அமைந்திருக்கும். 
பாபா கிம் டெக் என்ற பெரியவரும் சிக் ·பாத்திமா என்னும் அம்மையாரும்  பாடுவார்கள். இருவருக்குமே பல் கிடையாது. 
அந்த அம்மாளுக்கு நிற்க முடியாது; ஆகவே நாற்காலியில் அமர்ந்த வண்ணமே பாடுவார்கள். 
        பாபா கிம் டெக்  நையாண்டி கலந்த கேள்வியை நீளமாக ராகம்போட்டு இழுத்துப்பாடுவார். 
சிக் ·பாத்திமா வெற்றிலைப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு "சீரே-பினாங்க்"- வெற்றிலை-பாக்கு போட்டுக்கொண்டிருப்பார். கீழே வெற்றிலைப் பையைப் பார்த்தவண்ணமிருந்தாலும், கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.
பிறகு அவருடைய முறைவரும்போது பாபா கிம் டெக்குக்கு பதிலையும் சொல்லி, அத்துடன் அது முடிந்துவிடாமல் அதையே கேள்வியாக திருப்பிவிடுவார். சில சமயங்களில் அவருடைய பாட்டில் அடங்கியிருக்கும் விஷமம் பாபா கிம் டெக்கையே கூசவைக்கும். 
அப்புறம் என்ன?
கேட்டுக்கொண்டிருப்பவர்கள்  ஒரேயடியாகக் கூச்சல் போடுவோம்.
இளம் பெண்களெல்லாம் முகம் சிவக்க சிவக்க நெளிந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் எழுந்து சென்றுவிடமாட்டார்கள்;-)
இதெல்லாம் நாற்பது ஆண்டுக்கு முந்திய கதை. இப்போது அவர்களெல்லாம் இல்லை. அந்த மரபும் கிடையாது. 


அடித்துவிட்ட பந்தை, கீழே விழ விடாமல் அப்படியே அந்தரத்தில் சஞ்சரிக்கச் செய்வது போலல்லவா சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார்கள்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


1 comment:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete