Thursday 14 April 2011

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 2

திருமலை நாயக்கர் ஏற்கனவே வேண்டுதல் செய்திருந்தபடி ஐந்து லட்சம் பொன்னுக்கு திருப்பணிகள், ஆபரணங்கள் முதலியன மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செய்து வைத்தார். 

கோயிலின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்யும் போதுதான் அதிகப் பிரச்னைகள் ஏற்பட்டன. அனைத்து கோயில் ஊழியர்களும் கலகம் செய்தனர் அல்லவா? அதுமட்டுமல்லாது பட்டர்மாரிலேயே இரு பிரிவினர். குலசேகர் பாண்டிய பட்டர், விக்ரமபாண்டிய பட்டர் என்று இரண்டு மரபினர். யார்யாருக்கு என்ன உரிமைகள், முறைமைகள் என்பதில் போட்டி. 

அதை வரையறுத்துத் தந்தார். 

கோயிலில் தெய்வங்களுக்குரிய காரியங்களைச் செய்பவர்களை "தேவகன்மிகள்" என்று சொல்வார்கள். எல்லோரும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, எல்லோரும் "பிரம்மணர்" என்று முடிவு கட்டிவிடுகிறோம்.

ஆனால் அவர்களில் எல்லோருமே சிவ ஆலயங்களில் தெய்வங்களுக்குரிய எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடியாது.

அவர்களில் உச்சகட்டத்தில் இருப்போர் "ஆதிசைவர்" எனப்படுவர். வைதிக பிராம்மணர்கள் "பிரம்மஸ்ரீ" என்று பெயருக்கு முன்னாலும் "சர்மா" என்ற பட்டத்தை பின்னாலும் போட்டுக்கொள்வார்கள். 

இவர்களோ "சிவஸ்ரீ" என்று போட்டுக்கொள்வார்கள். "பட்டர்" என்ற பட்டமுண்டு.

No comments:

Post a Comment