Thursday 11 October 2012

THE HEN, THE FISH, THE TORTOISE

    கோழி, மீன், ஆமை

 அருள்பாலித்தல் குறித்து எடுத்துக்காட்டுக்களாகக் காட்டி யுள்ளவற்றை தீட்சைக்கும் உவமைப்படுத்துவார்கள்.
    தீட்சையில் மூவகையுண்டு.
    ஸ்பரிச தீட்சை, நேத்திர தீட்சை, மானச தீட்சை என்பன அவை.
    ஸ்பரிச தீட்சையில், குரு தன்னுடைய கையாலோ, காலாலோ,
அணைப்பினாலோ சீடனுக்கு தீட்சை கொடுப்பார்.
    இதற்குக் கோழியை உவமித்தல் உண்டு. கோழி தன்னுடைய முட்டையின் மீது தன் உடல் படும் வண்ணம் அமர்ந்திருந்து அடை காக்கும். அதுபோலவே சீடனின் மெய்தீண்டி, குரு தீட்சையைக் கொடுக்கிறார்.

    நேத்திர தீட்சை என்பதில், குரு தன்னுடைய பார்வையாலேயே சீடனுக்கு தீட்சை கொடுப்பார்.
    மீன், முட்டையிட்டபின்னர், அந்த முட்டைகளுக்கு மேலாக முன்னும்
பின்னும் நீந்தியவண்ணமிருக்கும். அதனுடைய தலை சற்றுக்கீழ் நோக்கி
இருக்கும் வண்ணம் அது நீந்தும். அதனுடைய பார்வையை அவ்வாறு
முட்டைகளின்மீது ஓட்டுமாம். கண்களாலேயே மீன், தன் முட்டைகளை
அடைகாப்பதாகக் கொள்வார்கள்.

    மூன்றாவது வகை தீட்சையில் எங்கோ இருக்கும் சீடனுக்கு மனதாலேயே மானசீகமாக குரு தீட்சை கொடுத்துவிடுவார். இதனை 'மானச தீட்சை' என்பார்கள்.
    இதற்கு ஆமையை உவமையாகக் கொள்வர்.
    ஆமை தன்னுடைய முட்டைகளை எங்கோயிருக்கும் கடற்கரையில்
இட்டுவிட்டு, அதுபாட்டுக்கு எங்கோ கண்காணாது பலநூறு மைல்களுக்கு
அப்பால் சென்றுவிடும். ஆனால் அதன் மனமெல்லாம் தன் முட்டைகளின் மீதே இருக்குமாம். அவ்வாறு ஆமை தன் மனதாலேயே தன்னுடைய முட்டைகளை அடைகாக்கும் என்று சொல்வார்கள்.

    அது சரி.
    'மானச சஞ்சரரே'- கேட்டிருக்கிறீர்களா?

    அதில் வருகிறதே 'பரமஹம்ஸமுக சந்த்ர சகோரே'....
    அதிலும் நீங்கள் சொன்ன கருத்து இன்னும் நுட்பமாக வரும்.
    அதுவும் ஒருவகை தீட்சைதான்.



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment