Friday 12 October 2012

PARAMAGURU

                            பரமகுரு

    குரு வழிபாட்டைப் பற்றி எழுதியிருந்தேன்.
    அது பற்றி எழுதிய பழைய மடலொன்று அகப்பட்டது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>   
    அம்பிகை வழிபாட்டில் குருவைத் தேடுவோர்க்கு குருவாக அமபிகையே வருவதாகச் சொல்லப்படும்.
    தட்சிணாமுர்த்திரூபிணீ
    தீக்ஷ¢தா   
    அஞ்ஜானத்வாந்ததீபிகா
என்று அம்பிகை வழுத்தப்படுகிறாள்.

    திருமூலர் தம்முடைய குருவாக சிவனைத்தான் கொண்டிருந்தார். நந்தி என்று குறிப்பிடுவார்.
    தட்சிணாமுர்த்தியையும் குருவாகக் கொள்பவர்கள் இருக்கின்றனர்.
    தட்சிணாமுர்த்தியின் அம்சமாக ஆதிசங்கரரைக் கொள்வார்கள். ஆகவே அவரை ஜகத்குரு என்றும் அழைக்கிறார்கள்.
    சிவகுருவாகிய முருகனை  'மகாதேசிகன்' என்றும் 'சிவஞான உபதேசிகன்' என்றும் சொல்லப்படுவதும் உண்டு. முருகனையே 'மகாகுரு' என்றும் கொள்ளும் சம்பிரதாயமும் உண்டு.    
    கீதை உபதேசித்த கிருஷ்ணரை தேசிகன் என்று குறிப்பிடுவதும் உண்டு.
    அப்பேற்பட்ட பெரும் ஆளே மெச்சத்தகு பொருள் முருகன்.

'பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி
மத்தைப்போருதொரு    பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாக
பத்தர்க்கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒருநாளே!

    அருணகிரிநாதரின் கடைசி ஞானத்திரட்டு கந்தர் அனுபூதி. அனுபூதி என்னும்போது அது தமக்குள் தாமே ரமித்துப் பெற்ற அரிய மெய்ஞான அனுபவம்.
    அவர் லயித்து லயித்துப்படுகிறார்........   

"நாதா குமரா நம"வென்று அரனார்
"ஓதாய்" என ஓதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா! குறமின் பத சேகரனே!

கரவாகிய கல்வியுளார் கடைசென்
றிரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே

கருதா மறவா நெறி காண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்?
வரதா முருகா மயில்வாகனனே
விரதா சுரசூர விபாடணனே!

அமரும்பதி கேள் அகமாம் என இப்
பிமரம் கெட மெய்ப்போருள் பேசியவா!
குமரன் கிரிராசகுமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனி வேல் ஐ நிகழ்த்திடலும்
செறுவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே!

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா!
விரிதாரண விக்ரமவேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே!

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததானால்
பூமேல் மயல்போய் அற மெய்ப்புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
"சும்மா இரு! சொல்லற!" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

"முருகன், குமரன், குகன்" என்றுமொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்?
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ, எண்குண பஞ்சரனே!

"முருகன் தனிவேல் முனி நம் குரு"என்று
அருள்கொண்டறியார் அறியும் தரமோ!
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

    யார் பரம குரு?
    :-)


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment