Sunday 27 November 2011

BIRTH OF A MAHATHMA


ஒரு மஹாத்மாவின் தோற்றம்



          மஹாத்மா காந்தியின் பல கோட்பாடுகளில் Personal Hygiene முக்கிய இடம் பெற்றிருக்கும். அவர் சொன்ன கிராமராஜ்யத்தில் கிராமப்புனருத்தாரணம் என்பது மிகவும் அடிப்படையான விஷயம். 
'சுத்தம், சுகம், சுந்தரம்' என்பது ஒரு தாரக மந்திரம். 
அந்த அடிப்படையில் sewage and sewerage மிகவும் முக்கியமானவை. 
எளிமையான கழிவறைகள் கட்டுவதையும் அவற்றைச் சுத்தப்படுத்துவதையும் அவரே நேரடியாக மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதுண்டு. 

மஹாத்மா காந்தியின் வாழ்வியல் சிந்தனைகளை மாற்றியவை மூன்று புத்தகங்கள். 
அவர் தென்னா·ப்ரிக்காவில் முதல்முதலாக ரயில் செல்லும்போது முதல் வகுப்பில் சென்றார். 

ஆனால் அந்த நாட்டில் நிறுவப்பட்டிருந்த 'அப்பார்ட்டைட்' இனவெறிக்கொள்கையின் விளைவாக நள்ளிரவில் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் பெட்டிபடுக்கையுடன் தூக்கி எறியப்பட்டார்.
அப்போது அந்தக் குளிரில் அவர் நினைவுக்கு வந்தது 'பகவத் கீதை'.
இயற்கையிலேயே கூச்சமும் அச்சமும் மிகுந்த காந்தி, அந்த இருளின் குளிரில் வெடவெடத்துக் கொண்டு பகவத்கீதையின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தைச்செய்துகொண்டார். 
இனிமேல் எதற்கும் யாருக்கும் மசிந்துகொடுப்பதில்லை.


அதிலிருந்து அவருடைய வாழ்க்கையே மாறியது.
அவருடைய வாழ்க்கையில் ஒரு mission and vision ஏற்பட்டுவிட்டன.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் இன்னொரு பயணத்தின்போது அவர் John Ruskin எழுதிய 'Unto This Last' என்னும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.
இது இன்னொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அன்றிலிருந்து  உடமைகளின் மீதும் பணத்தின்மீதும் இருந்த பற்றுக்களை நீக்கிக்கொண்டார். தமக்கென வாழா, பிறர்க்கென வாழும் பெருந்தகையாக மாறினார். 
ஜான் ரஸ்க்கினின் இறவாத்தன்மை பெற்ற வரி:


"Riches are just a tool to secure power over men. A labourer with a spade serves society as truely as a lawyer with a brief, and the life of labour, of the tiller of the soil, is the life worth living".


ஏற்கனவே அவர் தம் வாழ்க்கையிலேயே சில பரிசோதனைகள் செய்துகொண்டிருந்தார். 
பகவத்கீதையின் அமர வாக்கியங்களின் அடிப்படையில் அவருடைய வாழ்க்கை அமைந்துள்ளதா? 
பற்றின்மையைப் பற்றி பகவான் கூறியுள்ளாரே? 
ஆகையால் தம்முடைய மயிரைச் சொந்தமாக வெட்டிக்கொண்டார். கக்கூஸ் கழுவினார். தாமே துவைத்துக்கொண்டார். அவருடைய மனைவிக்குச் சொந்தமாகப் பிரசவம் பார்த்தார். 
ரஸ்க்கினின் நூலைப் படித்தபின்னரே தென்னா·ப்ரிக்காவில் அவர் ·பீனிக்ஸ் ஆசிரமப் பண்ணையை ஏற்படுத்திக்கொண்டார். அதுதான் அவருடைய கூட்டுப்பண்ணை, community living 
போன்ற கொள்கைகளுக்கு ஆரம்பமாக விளங்கியது.
தென்னா·ப்ரிக்காவில் வாழும் வெள்ளையரல்லாதாரெல்லாம் அடையாளக்கார்டுகள் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து மறியல் செய்தார். அதற்கு அவர் 'சத்யாக்கிரஹம்' என்ற 
பெயரிட்டார்.

சிறையில் இருக்கும்போது அவர் Henry Thoreu எழுதிய 'On Civil Disobedience' என்னும் கட்டுரையைப் படித்தார். 
அது இன்னொரு திருப்புமுனையை அவர் சிந்தனையில் தோற்றுவித்தது.  
தோரோவின் வரிகள்:


"An individual had a right to ignore unjust laws and refuse his allegience to a government whose tyranny had become unbearable. To be right, was more honourable than to be law-abiding. 
ஒத்துழையாமை இயக்கம் போன்ற சில கோட்பாடுகளுக்கு இவ்வரிகள் வழி வகுத்தன. 
இன்னொரு புத்தகம்?
Leo Tolstoy-யின் 'War and Peace'. 


இத்தனைக்கும் அடியில் இருந்த அந்த 'சுத்தம்.,சுகம், சுந்தரம்'.  


"The lessons which I propose to give you are how you can keep the village water and yourselves clean. What use you can make of the earth, of which your bodies are made; how you can obtain the infinite life force from the infinite sky over your heads; how you can reinforce your vital energy from the air which surrounds you; how you can make proper use of sun-light".
"Those who are in my company must be ready to sleep upon the bare floor, wear coarse clothes, get up at unearthly hours, subsist on univiting, simple food, even clean their own toilets".


அப்பேற்பட்ட காந்தியின் நாட்டில் இந்த கதி!


காந்தி கக்கூஸ் கழுவினார்.


நீங்களெல்லாரும் காந்தியையே கைகழுவிவிட்டீர்கள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினர்க்கு
    அடிக்கடி நினைவு படுத்த வேண்டிய செய்தி.
    ***********
    இந்திய நாட்டு மக்கள் (குடியரசின் மன்னர்கள்)
    கக்கூஸ் கழுவ வேண்டாம் - தானிருக்கும் சுற்றுப்புறத்தை கக்கூஸ் ஆக்காமலாவது இருக்கலாமே!

    ReplyDelete