Wednesday 27 July 2011

தேவையா.... தேவையில்லையா?

இக்காலத்தில் வெளிவரும் புத்தகங்கள் பலவற்றில் புலவர்கள் எழுதிய பல பாடல்கள் இருப்பதில்லை.

ஏன்?

ஒவ்வாக்கருதுக்கள் என்பது ஒரு காரணம். 

இன்னொன்று இடக்கராகப் பாடப்படும் பாடல்கள். இடக்கர் என்றால் விரசமாக அல்லது விரசத்தை மறைவாக வைத்துப் பாடப்படும் பாடல்கள். 

காளமேகத்தையே எடுத்துக்கொள்வோம். அவர் அந்த அறுபத்துநான்கு தண்டிகைப் புலவர்களுடன் நிகழ்த்திய எமகண்டப் போட்டியின்போது பாடிய அத்தனைப் பாடல்களும் அச்சிடப்படவில்லை.  இப்போது நாம் 'கொச்சை'யாகவும் 'கெட்டவார்த்தை'களாகவும் கருதும் சொற்கள் இருப்பதால்தான்.  இவை மறைந்துவிடும். 

இவற்றை வெளிப்படுத்துவதா இல்லையா? 

அல்லது அப்படியே விட்டுவிடுவோமா?
இளைய தலைமுறையிடம் கேட்கலாம். ஆனால் இணையத்தில் இப்போது பேர் போட்டுக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையின் நோக்குகள் priorities எல்லாமே வேறு. அது நன்கு தெரிகிறது. அவர்களும் இப்போது இணையத்தில் trend-setters. ஆகவே அவர்கள் தங்களின் நோக்குகள் நோக்கங்கள் பார்வைகள் குறிக்கோள்கள் முதலியவற்றின் அடிப்படையில் கருத்துச்சொல்வார்கள். அல்லது ஏதாவது திட்டுவார்கள்:-)

எதற்கு வம்பு:-)

'இதெல்லாம் என்னத்துக்கு?' என்று சுலபமாகச் சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படிப் பார்த்தால் இணையத்தில் இன்று பேசப்படும் பல விஷயங்கள்தான் என்னத்துக்கு?

உரைவீச்சு, ஹைக்கூ, சிறுகதைகள் எல்லாமே 'என்னத்துக்கு' ஆகிவிடும். சில இதழிகள் போடும் விஷயங்களும் 'என்னத்துக்கு' ஆகிவிடும்.  சில உன்னத குறிக்கோள்களுடன் ஆரம்பித்த சில திட்டங்களும் 'என்னத்துக்கு' ஆகிவிடும். இல்லையா?

நான் அவற்றையெல்லாம் அப்படியெல்லாம் 'என்னத்துக்கு' என்று நினைத்ததேயில்லை.

அதது அவரவருக்கு
அதது அததற்கு
அவரவர் அங்கங்கே

ஆனால் நிசப்தமாக, மௌனமாக இருக்கும் மிகப் பெரிய இளைஞர் கூட்டமும் இணையத்தில் இருக்கிறது.   22 வயதிலிருந்து 28க்குள் இருக்கும் இளைஞர்கள் ஏராளமானோர் இணையத்தில் இருக்கின்றனர்.  எதிர்காலம் அவர்களுடையது. எதிர்காலத்தில் என்னென்னவெல்லாம் இருக்கவேண்டும் என்பது அவர்களின் விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. 

எங்களைப் பொறுத்தவரைக்கும்.........

நாங்கள் காளமேகப் புலவர் பாடல்கள், கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடு தூது, பயோதரப் பத்து எல்லாவற்றையும் நன்றாகவே ரசித்தோம். இன்னும் பசுமையாக அவை எங்கள் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போதும் அந்தப் பாடல்கள் ஏற்படுத்தும் கிளுகிளுப்பைச் சொற்களில் அடக்கிவிட முடியாது.

2 comments:

  1. பயோதரப் பத்து நூல்கள் ஏதேனும் தாங்கள் அறிவீர்களா? விவரங்கள் தந்தால் மகிழ்வேன். நன்றி

    ReplyDelete
  2. பயோதரப் பத்து நூல்கள் ஏதேனும் தாங்கள் அறிவீர்களா? விவரங்கள் தந்தால் மகிழ்வேன். நன்றி

    ReplyDelete