Tuesday 6 March 2012

VIVASTHAI


விவஸ்தையும் அவஸ்தையும்

ரொம்ப நாளைக்கு முன்னால், கோலாலும்ப்பூர் அன்பர் ஒருவர், "நீங்கள் எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள்?", என்று கேட்டார். 

"நான் எங்கே இப்போதெல்லாம் எழுதுகிறேன்? காம்ப்பியூட்டர் கீயையல்லவா தட்டுகிறேன்", என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. ஏடாகூடமாக எடுத்துக்கொள்வார்கள்.

ரொம்ப நாளைக்கு முன்னால், மலேசியாவில் நான் ஒரு பிரதிவாதி பயங்கரனாக உலா வந்து கொண்டிருந்த சமயம். 
ஜோகூர் என்னும் மாநிலத்தில் மலேசிய இந்து சங்கத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்த சமயம். 
அப்போது கோத்தாத்திங்கி என்னும் ஊரில் இருந்தேன். அங்கு என்னுடைய வீட்டிலேயே சிலருக்கு மிக ஆழமாக இந்து சமயத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். 
மேடையில் சமயச்சொற்பொழிவு ஆற்றுவதும் ஒரு முக்கிய பயிற்சி.

ஒருநாள் Big Bang Theory-யை நம்முடைய 'ஸ்பந்தம்' என்னும் தத்துவத்துடன் ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அதைப் பற்றி சில கேள்விகளை ஒருவர் கேட்டார். அவர் இந்து சங்கத்தில் முக்கியமான புள்ளி.
"நான் சொன்னேன், "நான் அதை விவரித்துச் சொல்லிவிட முடியும். ஆனால் உங்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியுமா?"
அவர் மெதுவாகத் தலையை ஆட்டிக்கொண்டார்.

சில மாதங்கள் கழித்து அவர் இன்னோர் இடத்தில் இதே சமாச்சாரத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அப்போது ஒருவர் அவரிடம் இன்னும் விளக்கம் கேட்டிருக்கிறார். 
அதற்கு அவர் சொன்னார், "நான் விளக்கமாகச் சொல்லிவிடுவேன். உங்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கிறதா?"
ஒரே அறை. 
கேள்வி கேட்ட ஆளுக்கு அத்தனை ஆவேசம். 
கெட்ட வார்த்தைகளில் வாயாறத் திட்டிவிட்டுச் சென்றாராம்.
'விவஸ்தை' என்றொரு சொல் இருக்கிறது அல்லவா?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$




No comments:

Post a Comment