Wednesday 7 March 2012

SIMPLE BUT UNDERSTANDABLE

எளிமையும் புரிதலும்

இந்த மடல் பரிமாற்றம் தமிழ் டாட் நெட்டில் 1999-ஆம் ஆண்டின் அக்டோபரில் நடைபெற்றது. 
மணி எம் மணிவண்ணன், டாக்டர் இண்டி ராம், நான் ஆகொயோர் பங்கு பெற்ற மடலாடல். அதாவது உரையாடல் போல மடலாடல்.
அப்போது மணிவண்ணன் காலி·போர்னியாவில் ·ப்ரெமாண்ட் என்னும் ஊரில் இருந்தார். இப்போது சென்னைவாசம். 
இண்டி ராம் தமிழக ஆசாமி. பெயர் ராம் ரவீந்தர். தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜில் படித்தவர். யூஎஸ்ஸில் இண்டியானா மாநிலத்தின் இண்டியானாப்பாலிஸ் நகரில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றினார். தமிழ் ஆர்வமுள்ளவர். தமிழர்களிடையே பல சீர்திருத்தங்களைக் காண வேண்டும் என்ற வேட்கை மிகுந்தவர். இப்போது எங்கு எப்படி இருக்கிறார் என்பது தெரியாது. 
இண்டியானாவில் இருந்ததாலும் அப்போது இண்டியானா ஜோன்ஸ் படங்கள் பிரபலமாக இருந்ததாலும் இவருக்கும் இண்டி ராம் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.
மடலாடலைப் படியுங்கள்.....


At 11:54 AM 10/14/99 -0500, Nanivannan wrote:
 இது ஒரு முதல் முயற்சி. எளிய தமிழில்,
அதே நேரத்தில் பாமரர்களுக்கும் புரியும் தமிழில் எழுத முயற்சித்துள்ளேன்.
அவையோரின் திருத்தங்களை வரவேற்கிறேன்.


அன்புடன்,


மணி மு. மணிவண்ணன்.


டாக்டர் இண்டி ராம் எழுதுகிறார் - 


அன்புள்ள மணிக்கு,
எளிய . அதே சமயத்தில் "பாமரர்களுக்கும் புரியும்" . இதில் முரண்பாடுள்ளமாதிரி இருக்கிறதே.
 எளிய தமிழ் தானே பாமரர்களுக்குபுரியக்கூடிய தமிழும்? 
இண்டி ராம்


நான் எழுதுகிறேன் - 


அன்பர்களே/டாக்டர் ராம்,


டாக்டர் ராம் தவறாக நினைத்துக்கொள்ளவில்லையானால் ஒரு கருத்தைக் கூறுகிறேன்.
எளிமையான தமிழில் எழுதுவற்கும்பாமரர்களுக்கும் புரியும்படி எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு.
சொல்லப்படும் விஷயத்தின் தன்மை, விஷயத்தை விளக்குவதற்கு நாம் கையாளுகின்ற முறைகள், பயன்படுத்தும் உதாரணங்கள், சொல்லும் மேற்கோள்கள் ஆகியவையும்,நாம் கைக்கொள்ளுகின்ற எழுத்து நடையும் (Style) மிக முக்கிய அங்கம்வகிக்கின்றன. பேச்சுக்கும் இது பொருந்துகிறது. 
எவ்வளவு எளிமையான சொற்களைப் பயன்படுத்தினாலும், அதைச் சொல்லுகிற விதத்தில் சொல்லவில்லையானால் பாமரர்களுக்கு அது புரியாதுபோய்விடும்.
கூலிம் என்ற ஊரில் "சாணிலும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணிலு¢ம் உளன்", என்ற கம்பராமாயணப் பாடலுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன். 
அப்போது "அணு" என்பது என்ன; எவ்வளவு சிறியது என்பதை சில உதாரணங்களுடன் விளக்கினேன்.
அதில் ஓர் உதாரணம்: "ஒரு ஆப்பிளை எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் பாதியாக வெட்டுங்கள். அந்தப் பாதியை பாதியாக வெட்டுங்கள். அதில் வரும் பாதியை மீண்டும் சமபாதியாக வெட்டுங்கள். இப்படியே கூறு போட்டு வெட்டிக்கொண்டே போகவேண்டும். நீங்கள் தொண்ணூற்று ஏழாவது வெட்டு வெட்டியபின்னர், அதற்குமேல் வெட்ட முடியாதபடிக்கு ஆப்பிள்துணுக்கு நுண்ணியதாக விளங்கும்.அந்த மூலக்கூறு அளவுதான் "அணு" என்பது".
மேலே செந்தமிழில் எழுதியிருப்பது உங்களுக்காக. ஆனால் அன்று, அங்கு, நான் அவர்களுக்கு, இதை சொல்வழக்கில் உள்ள தமிழில்தான் சொன்னேன். இன்னும் விலாவாரியாகத்தான் சொன்னேன்.
சில மாதங்கள் கழித்து, புக்கிட் மெர்த்தாஜம் என்னும் ஊரில் "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி" பாடலை விளக்கும்போது கூட்டத்தினரைப் பார்த்து, "உங்களில்யாருக்காவது "அணு" என்றால் என்ன என்பது தெரியுமா?" என்று கேட்டேன்.
அப்போது பாரிட் புந்தார் என்னும் ஊரைச் சேர்ந்த ஓர் ஆள் எழுந்தான். அந்த வட்டாரத்தில் என்னுடைய கூட்டம் எங்கு நடந்தாலும் வந்துவிடும் ஆசாமி. டக்கென்று பதில் சொன்னான்.
"ஒரு ஆப்பில எடுத்து,தொண்ணூத்தேளு தடவை வெட்டுனா அணு கெடைக்குங்க."
மட்டையைத் தூக்கிப் பிடிக்கும் முன்னரேயே விக்கட்டின் மூன்று கட்டைகளும் எகிறிப் பறந்தது போன்ற உணர்ச்சி. உள்வாங்கிய மூச்சை வெளியில் விட சற்று நேரமாகியது.
பாமரர்களுக்கும் விளங்கும் முறையில்சொல்வது ஒரு கலை.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அதை நன்கு வளர்த்துக்கொண்டேன். 
இப்போது ரப்பர் தோட்டங்கள் போன்றஇடங்களில் பேசுவது நன்றாகக் கைவந்து விட்டது.
இந்தக் கலையில் வல்லவர் காமராசர்.பெரிய திட்டங்களைப் பற்றி யெல்லாம் அவர் கிராமத்தார்களிடம் விளக்கிச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய தமிழும்எளிமை; சொல்லும் விதமும் எளிமை. கிராமத்தினரும் எளிதில் புரிந்துகொண்டனர்.ஒரு முறை ஜெயேந்திர சரஸ்வதிகள் பிரான்மலையில் செய்த உபன்னியாசத்தையும் கேட்டிருக்கிறேன். வால்மீகி வரலாற்றைச் சொல்லி பல விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார். அங்கு ஏராளமான கிராமத்து மக்கள் கூடியிருந்தனர். அவர்களுக்குப் புரிந்தவகையில் சொன்னது பெரிய விஷயம்தான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment