Wednesday 21 December 2011

STRANGE BUT TRUE-#3

செம்மான் மகள் கணவன்


ஸ்ரீவள்ளி

நான் 1978-இல் கெலாந்தான் என்னும் மாநிலத்தின் பெரிய மருத்துவ மனைக்கு வேலை மாற்றலாகிச் சென்றேன்.
அந்த மாநிலத்தின் தலைநகரமாகிய கோத்தா பாரு என்னும் நகரத்தில் அந்த மருத்துவமனை இருந்தது. அங்கேயே அருகில் ஜாலான் பாயாம் என்னும் இடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கியிருந்தேன்.
அங்குதான் மந்திரங்களின் ஆற்றலைப் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சிகளைச் செய்துவந்தேன்.
அங்கு ஒரு நண்பர். டாக்டர் சிங்கம் என்று பெயர். அவரும் ஹெல்த் துறையில் இருந்துவிட்டு, விலகி சொந்தமாகக் கிலினிக் வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் நீளமானது - சத்தியகுண சிங்கம். யாழ்ப்பாணியர். பின்னே இந்த மாதிரி பெயரை யாராவது கச்சிராயன்பட்டி
அம்பலக்காரரா வைத்திருக்கப் போகிறார்?


அவருடைய நண்பர் ஒருவர் சி.ஐ.டி.பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தார். என்னமோ ஒரு சிங்.
       கோத்தாபாருவின் அருகில்தான் தாய்லந்து எல்லை இருக்கிறது. அப்போது - அதாவது 1980-81=இல் தாய்லந்தில் அச்சடிக்கப்பட ஐம்பது ரீங்கிட் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தன.
       அவற்றில் ஒன்றைக் கைப்பற்றி அதை அந்த சர்தார்ஜி ஒரு பெரிய கவர்கூட்டிற்குள் போட்டு வைத்திருந்தார். மிக முக்கியமான எவிடென்ஸ்.
காணாமற் போய்விட்டது.
ரொம்பவும் ஸீரியஸான விஷயம்.
அவரும் சிங்கமும் என்னிடம் வந்தார்கள்.
ப்ரஸ்ன தந்த்ரத்தின் மூலம் அது கிடைக்கக்கூடிய பாஸிபிலிட்டீஸை Possibilities அறிந்து கொண்டேன்.
நம் இந்து சமயத்தில் பேரருளாளர்கள் பாடிய சில பாடல்களுக்குப் பெரும் ஆற்றல் உண்டு.
அருணகிரிநாதர் பாடிய பல திருப்புகழ் பாடல்கள், மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், திருவகுப்புகள், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி ஆகியவற்றின் பாடல்கள் ஆற்றல் மிக்கவை.
இவற்றில் மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுபவை கந்தர் அனுபூதியின் பாடல்கள்.
அதில் உள்ள 51 பாடல்களுக்கும் யந்திரங்கள், பிரயோகமுறைகள், பூஜாவிதானம், பலன்கள் ஆகியவை விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.
காணாமற் போன/திருட்டுப் போன பொருள் கிடைப்பதற்கு ஒரு பாடல் இருக்கிறது.


கந்தர் அனுபூதியின் பன்னிரண்டாம் பாடல்:


செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மாபொருளொன்றும் அறிந்திலனே


இந்தப் பாடலுக்கு ஒரு மந்திரப் பிரயோகம் உண்டு. திருட்டுப்போன பொருட்கள் கிடைப்பதற்கு இந்தப் பாடலை உரிய முறைகளுடன் உருப் போடவேண்டும்.
அந்த சிங்கு எங்கே போய் உருப் போடப் போகிறார்?
ஆகவே அவருக்காக நானே உருவேற்றினேன்.


அந்த வாரக் கடைசி. லீவு நாள். ஹாலில் அமர்ந்திருந்தவன் திடீரென்று நிமிர்ந்து பார்த்தேன். ஏதோ நிழலாடியது மாதிரி இருந்தது.
அந்த சிங்கு நின்றிருந்தார்.
நிழல்கூட வரும்போது தெரியும். இந்த சீ ஐ டீ ஆத்மாக்கள் எப்படித்தான் வருவார்களோ?
"அந்தக் கவர் கிடைத்துவிட்டது. ஒரு ஷெல்·புக்கு அடியில் செருகப்பட்டிருந்தது".
"கவனக்குறைவாக நீங்கள் போட்டிருப்பீர்களோ?" என்றேன்.
"போடவில்லை. என்னுடைய மேஜை டிராவரில்தான் வைத்தேன்".
"அந்த ஷெல்·ப் அடியில் நீங்கள் தேடாமல் விட்டிருப்பீர்கள்."
"அந்த ஷெல்·ப் என்னுடைய முதுகுக்குப் பின்னால்தான் இருக்கிறது. மிஸ் பண்ணும் சாத்தியமே இல்லை. அங்கும் தேடிவிட்டேனே. யாரோ செருகி வைத்து விட்டிருக்கின்றனர்", என்றார்.
பொருள் கிடைத்துவிட்டது.


அந்தப் பாடலில்தான் அந்த 'சும்மா இரு' வருகிறது.




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


3 comments:

  1. இதுபோன்ற பயனுள்ள பழம் இலக்கியங்களை மக்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிகொடுங்கள்

    ReplyDelete
  2. எப்படி சொல்லிக்கொடுப்பது?
    பத்திரிக்கைகள், ரேடியோ, டீவீ போன்ற மீடியாக்கள் ஆதரவு கொஞ்சம்கூட இல்லை.
    நூல்கள் போடுவதற்கு வசதியும் இல்லை.

    ReplyDelete