Sunday 5 June 2011

மனமும் மந்திரமும் -#1

ஒரு சமயம் சில அன்பர்கள் வந்து பார்த்தபோது மந்திரங்களைப் பற்றியும் நிறையப் பேசப்பட்டது. அவர்கள் கேட்டது அம்பிகை சம்பந்தமான மந்திரங்களைப் பற்றி.

பொதுவாகவே மந்திரங்களில் பலவகையுண்டு. பெண் தேவதைக்குரிய மந்திரம், ஆண்தேவருக்குரிய மந்திரம் என்பது மாத்திரமல்ல.  ஆண் பெண் மந்திரங்கள்கூட உண்டு.  ராஜமந்திரம் என்றவகையுண்டு.  நரசிம்ம மந்திரம் என்பது ஒரு ராஜமந்திரம். இதையெல்லாம் செய்வதற்கு ஆசாரங்கள் நியமங்களெல்லாம் உண்டு. 

ஆசாரம், நியமம் என்றால் நம்ம ஆட்கள் எப்போதுமே சைவமாகச் சாப்பிடுவது, குளிப்பது, கால்கை கழுவுவது, பஞ்சகச்சம் வைத்துக்கட்டுவது, இடுப்பில் துண்டுகட்டுவது, கொட்டை, பட்டை அணிதல், சடங்குகளை ஏராளமாக இணைத்துச்செய்வது போன்றவற்றில்தான் கவனத்தையும் செலுத்துகிறார்கள்; அவற்றையே வலியுறுத்துகிறார்கள்.

அவை மட்டும் போதாது.

மனதில் உறுதி, வினைத்திட்பம், தீர்க்கமான கவனம், அலையாத, நிலைத்த மனம், ஒருங்குசேர்த்து இலக்கில் மட்டுமே செலுத்தப்படும் மனம், தேவையானவற்றை மட்டுமே பார்க்கும் பார்வை.....இப்படி பல விஷயங்கள் உண்டு.  இவை இல்லாமல் ஆசாரம் என்ற போர்வையில் செய்யப்படும் செய்கையெல்லாமே வெறும் Charade என்று சொல்லப்படும் ஒருவகைக் கூத்தாக மாறிவிடும்.

லயிக்காத மனம் பிரயோசனமில்லை.

விக்கிரகம், படம், யந்திரம், மண்டலம் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.  மனோலயம் ஏற்படவேண்டும் என்பதற்கும் அவை ஒரு காரணமாக அமையும். மனதை ஈர்ப்பதற்காக. கண்களுக்கும் பார்வைக்கும் இலக்கு, மனதுக்கும் லயிப்பு.  இதை விட்டுவிட்டு வெறெதெல்லாமோ செய்துகொண்டிருப்பதில் பயனில்லை. 

நட்ட கல், நட்ட கல்தான். 

உள்ளிருக்கும் நாதன் அந்தக் கல்லில் வரமாட்டான்.

முதலில் நாதனே உள்ளிருந்தால்தானே!

ஹஹ்!
இதுதான் அடிப்படையே.

No comments:

Post a Comment