Monday 16 May 2011

காளமேகத்தின் கால் கணக்கு


இன்று காளமேகப் புலவரின் பாடல் ஒன்று.......



பூநக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால் பதினேழாகும் - மானேகேள்
முண்டகத்தின்மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்

பூ + நக்கி = தேனீ, தும்பி
"கொங்குசேர் வாழ்க்கையஞ்சிறைத்தும்பி" என்னும் குறுந்தொகைப் பாடல் ஞாபகத்துக்கு வரும். இல்லையென்றாலும் திருவிளையாடல் நாகேஷ¤ம் சிவாஜி கணேசனும் கொண்டுவந்துவிடுவார்கள். 
தேனீ முதலியவற்றுக்கு ஆறுகால்.
பறவைகளுக்கு 9 x 1/4 = இரண்டே கால்
ஆனைக்குக் கால் பதினேழு = 17 x 1/4 = நாலேகால்

சுருங்கச் சொல்லின், தேனீக்கு ஆறுகால்; பறவைகளுக்கு இரண்டே கால்; யானைக்கு கால் நான்கு மட்டும்.

முண்டகம் = தாமரை 
முழுநீலம் = நீலோத்பல மலர்
தாமரையின்மீது முழுநீலம் = நீலமலர் பூத்தது என்பது தாமரையாகிய முகத்தின்மீது நீலோத்பலம் போன்ற கண்களைக் குறிக்கும்.

யார் அந்த Blue-Eyed Babe?

1 comment:

  1. kaalaip patri kuuri viddu een kankalaip patri solla veendum?

    ReplyDelete