Friday 23 March 2012

THE SURGEON AND YOGA-SIDDHI

சர்ஜனும் யோகாவும்

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைப் பிடிக்க ஆரம்பித்த சமயத்திலிருந்தே மேல்நாட்டு மருத்துவம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.


கிழக்கிந்தியக் கம்பெனியில் மருத்துவர்கள் இருந்தார்கள். அத்துடன் படைப் பிரிவுகளிலும் Army Surgeons என்னும் பதவிகள் இருந்தன.


ஓரளவுக்கு நல்ல சம்பளமாகவும் இருந்திருக்கிறது.


அப்போதெல்லாம் பல போர்களும் சண்டைகளும் நடந்துகொண்டேயிருந்தன. பிரிட்டிஷ் பட்டாளம் கண்ட கண்ட இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியிருந்தது.


இந்தியாவில் அலோப்பதி மருத்துவத்தின் ஆர்ம்பகாலத்தைப் பற்றி நான் ஒரு சிறிய ஆராய்ச்சி செய்ததில் ஒரு விசித்திரமான சர்ஜன் பற்றி தெரியவந்தது.


சர்ஜன் ரெஜினால்ட் என்பது அவருடைய பெயர்.


தாம் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் இந்தியர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக தக்க துணையுடன் வெளியில் சென்று உலாவுவார்.


அப்போது சில யோகியர் நெருப்புமேல் நடப்பது, ஆணிப்படுக்கையில் படுப்பது, மூச்சை அடக்குவது, இதயத்தை நிறுத்துவது போன்றவற்றையெல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறார்.


இதைக் கேம்ப்புக்கு வந்து அவர்களுடைய Lounge Pub-இல் சொல்லியிருக்கிறார்.


அதற்கு அவர்கள், "இதெல்லாம் சும்மா கப்ஸா என்பதை நீயும் அறிவாய். நாங்களும் அறிவோம். இதையெல்லாம் நீ நம்புகிறாயா?" என்றார்கள்.
அவர் சொன்னார்: "இல்லை. நானும் நம்பவில்லை. ஆனால் என் கண்களால் நேரில் பார்த்தேன்".


அவர் மற்றவர்கள் போலல்லாமல் ஓய்வு நேரமிருக்கும்போதெல்லாம் யோகியரைத் தேடிச் செல்வார்.


ஒருநாள் பக்கத்து கிராமத்தில் ஒரு யோகியார் தன்னுடைய உயிரை விடப்போகிறார் என்பதை அறிந்து அங்கு சென்றார்.


யோகியார் ஒரு மரத்தடி மேடையின்மீது அமர்ந்துகொண்டார்.
அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நேரத்தில் அவர் மூச்சு விடுவதையும் நிறுத்தினார். அவருடைய இதயமும் நின்றது.


அவர் உடற்கூட்டுக்குள் ஒருவரும் இல்லை.


இது ரெஜினால்டுக்கு ஒரு திருப்புமுனையாகப் போயிற்று


யோகியரைத் தேடித்தேடி அங்கும் இங்கும் செல்லலானார், ரெஜினால்ட். அவர்களுடன் பழகுவார்.
திரும்பிவந்து Army Mess-இல், தனியாக உட்கார்ந்துகொண்டு பைப்பை வாயில் கடித்தவாறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார். நடுவில் அடிக்கடி, "ஹ்ம்ம்ம்...." என்று ஓசையெழுப்பியவாறு இருப்பார்.


அரசாங்கம் அவருக்கு ஆறுமாததுக்குக் கட்டாய விடுமுறை கொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தது.
"தாமாகப் பேசிக்கொண்டிருப்பது. நாம் சொல்வதைக் காதில் வாங்காமல் வெறித்த பார்வையோடு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பது.... இப்படியெல்லாம். ஆறுமாதம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்", என்று மற்றவர்களிடம் அவருடைய கமாண்டர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.


யோகியரைப் பற்றிய சர்ஜன் ரெஜினால்டின் ஆராய்ச்சிதான் அந்தத் துறையில் மேற்கத்தியாரின் அறிவியல்பூர்வமான முதல் ஆராய்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment: